அன்பான பகுதி நேர ஆசிரியர்களுக்கு வணக்கம்.
பத்து நாட்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு,
அரசு
1. நமக்கு 2,500 ஊதிய உயர்வு மற்றும்
2. ₹10,00,000 வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
எனவே, கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் வாபஸ் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும், நாம் கேட்ட அனைத்து வேலை நாட்களிலும் முழு நேரப் பணியும் அதற்கேற்ற ஊதிய உயர்வும் சிறிதளவும் பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, அரசின் இந்த பதிலில் திருப்தி இல்லாததால் இலக்கை எட்டும் வரை இனிவரும் காலங்களிலும் போராட்டங்கள் தொடரும்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோரின் ஆதரவோடு கடும் போராட்டத் தொடர்ந்தபோதும், அரசு இது மட்டுமே அறிவித்திருக்கிறது. இதையும் முன்னெடுக்கவில்லை எனில் 2026 இல் இந்த அறிவிப்பை மட்டுமே வழங்கியிருக்கும் போல் தெரிகிறது.
இந்த ஆட்சியாளர்களிடம் பணி நிலைப்பு எப்பொழுது சாத்தியம் என்றே தெரியவில்லை.
டெட் தேர்ச்சி பெற்றோருக்கு அறிவிப்பு எதுவும் இல்லை. போட்டித் தேர்வு ஒருவேளை ரத்து ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாற்றி வெற்றி காண்போம்.
போராட்டங்கள் மட்டுமே தீர்வு.
ஒற்றுமையே பலம்.
பொன். சங்கர்
1. நமக்கு 2,500 ஊதிய உயர்வு மற்றும்
2. ₹10,00,000 வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
எனவே, கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உறுதியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் வாபஸ் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
இருப்பினும், நாம் கேட்ட அனைத்து வேலை நாட்களிலும் முழு நேரப் பணியும் அதற்கேற்ற ஊதிய உயர்வும் சிறிதளவும் பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, அரசின் இந்த பதிலில் திருப்தி இல்லாததால் இலக்கை எட்டும் வரை இனிவரும் காலங்களிலும் போராட்டங்கள் தொடரும்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோரின் ஆதரவோடு கடும் போராட்டத் தொடர்ந்தபோதும், அரசு இது மட்டுமே அறிவித்திருக்கிறது. இதையும் முன்னெடுக்கவில்லை எனில் 2026 இல் இந்த அறிவிப்பை மட்டுமே வழங்கியிருக்கும் போல் தெரிகிறது.
இந்த ஆட்சியாளர்களிடம் பணி நிலைப்பு எப்பொழுது சாத்தியம் என்றே தெரியவில்லை.
டெட் தேர்ச்சி பெற்றோருக்கு அறிவிப்பு எதுவும் இல்லை. போட்டித் தேர்வு ஒருவேளை ரத்து ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண் தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலாற்றி வெற்றி காண்போம்.
போராட்டங்கள் மட்டுமே தீர்வு.
ஒற்றுமையே பலம்.
பொன். சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக