ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரத்தை வலியுறுத்தி இன்று செப் 25 முதல் சென்னை டி பி ஐ யில் உண்ணாநிலை மற்றும் காத்திருப்பு போராட்டம்



        பணி நிரந்தரத்தை வலியுறுத்தும் பகுதி நேர ஆசிரியர்களின் மாபெரும் உண்ணாநிலை மற்றும் காத்திருப்புப் போராட்டம்  சென்னை டி பி ஐ - யில் இன்று திங்கள் கிழமை செப்டம்பர் 25, 2023 முதல் தொடங்குகிறது.

 தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து  அரசுப் பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்றக்கோரி பெருந்திரளாகக் கலந்து கொண்டு இன்று முதல் வலிமையான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக