வெள்ளி, 29 செப்டம்பர், 2023

சூறாவளியிலும், மழையிலும் வாழ்வாதாரத்திற்காக போராடும் பகுதி நேர ஆசிரியர்கள்...


    சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் அரசுப் பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் 5வது நாளாக தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

 தற்பொழுது பலமான சூறாவளிக் காற்றும், மழையும் பெய்து கொண்டு உள்ளது. அதனையும் பொருட்படுத்தாது பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

   பொதுமக்களும், பல்வேறு கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையிலும் அரசு எதனையும் கண்டுகொள்ளாத நிலையில் ஆசிரியர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது.

   எனவே, அரசு வறுமையில் வாடும் பகுதி நேர ஆசிரியர்களின் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்கு, தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக